வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மும்பையில் லாரி கால்வாயில் விழுந்து 14 பக்தர்கள் பலிலாரி இலங்கை அகதிகளுடன் ராமேஸ்வரம் வந்த விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த பெண் அஞ்சலிகா உள்பட இருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தை மீட்க ராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் உள்ள தமிழர்கள்உயிருக்கு பயந்து அகதிகளாக தமிழகம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அகதிகள் அனைவரும் நள்ளிரவில் படகுகள் மூலம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் வந்திறங்குகின்றனர். அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில்அதிகாரிகள் தங்க வைக்கின்றனர்.
அப்படி அகதிகளாக வந்தவர்களில் விடுதலைப்புலிகள் யாராவது இருக்கிறார்களா என்ற சோதனை அடிக்கடி நடைபெற்று வருகிறது. புதன் அன்று மண்டபம்அகதிகள் முகாமில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சேஷசாயி, அகதிகள் மறுவாழ்வு ஆணையர் மெய்கண்ட தேவன், விசாரணைப் பிரிவு தனி கலெக்டர்சங்கிலி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவியுடன் அகதிகள் வீடுகளில் புலிகள் தங்கியிருக்கிறார்களா என்பதை வீடு வீடாக சென்று அதிகாரிகள் குழுவினர்சோதனையிட்டனர். விடிய விடிய இச்சோதனை நடைபெற்றது. பின்னர் போலீசாரின் பாதுகாப்பில் இருந்த 12 அகதிகளை அவர்கள் சோதனையிட்டனர்.இவர்கள் அனைவரும் மணல் திட்டு என்ற இடத்தில் நடுக்கடலில் இறக்கி விடப்பட்டவர்கள். அவர்களை இந்திய கடற்படையினர் அழைத்து வந்து தனுஷ்கோடிபோலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த 12 பேர்களில் அஞ்சலிகா என்ற பெண் புலியும், சிற்றம்பலம் என்ற விடுதலை புலியும் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.