Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா கிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - அசாருதீன் ஆட்ட நிாயகன்

ஷார்ஜா:

கோகோ-கோலா கோப்பைக்காக ஷார்ஜாவில் வியாழக்கிழமை நிடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மோயின்கான் தலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இம்ரான் நிசீரும், அஃபிதியும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். துவக்கமே அணிக்கு பேடியாக இருந்தது. ரன் எதுவும் எடுக்காத நலையில் அஃபிதி அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த அப்துர் ரசாக்கும் உடனேயே அவுட்டானார். 5 ரன்களில் 2 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது.

அடுத்து வந்த இன்சமாம் உல்-ஹக், துவக்க ஆட்டக்காரர் இம்ரான் நிசீருடன் சேர்ந்து நின்றாக விளையாடினார். இவரும் 3-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 61 ஆக இருந்தபோது இம்ரான் நிசீர் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் சவு ஆரம்பமானது. பாகிஸ்தான் வீரர்கள் வருவதும் அவுட்டாகிப் போவதுமாக இருந்தனர். இந்திய வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களை அவுட்டாக்கினர்.

இறுதியாக, 45.3 ஓவல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களைப் பாகிஸ்தான் எடுத்தது.

50 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நலையில் இந்தியா அடுத்து விளையாடியது. வழக்கம்போல கேப்டன் கங்குலியும், சச்சின் டெண்டுல்கரும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். கங்குலி வழக்கம்போலவே தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால், டெண்டுல்கர் பொறுமையாக விளையாடினார். இருப்பினும், கடந்த ஆட்டத்தைப் போலவே வெகு விரைவில் டெண்டுல்கர் அவுட்டானார். அவர் 11 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கங்குலியும் அவுட்டானார்.

இந்தியா விரைவாக இரு விக்கெட்டுகளை இழந்த நலையில், அடுத்து வந்த திராவிடும், அசாருதீனும் நலைமையை உணர்ந்து பொறுமையாக விளையாடினர். திராவிட் அதிகப் பொறுமையாக விளையாடினார். ஆனால், 26 ரன்கள் எடுத்த நலையில் அவர் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா வந்தார். இதற்கிடையே, அசாருதீன் துவக்கத்தில் காட்டிய பொறுமையைக் கைவிட்டு சற்று வேகமாக ரன்கள் குவித்து அரை சதத்தைக் கடந்தார். ஆனால் 54 ரன்கள் எடுத்த நலையில் அவர் அவுட்டானார்.

இறுதியில், அரஷத் கான் வீசிய 44-வது ஓவல் பவுண்ட அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா. 43.3 ஓவல் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இறுதி ஓவர்களில் இந்திய வீரர்கள் மிகவும் பொறுமையாக விளையாடினர்.

54 ரன்கள் எடுத்த அசாருதீன் ஆட்ட நிாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து இத் தொடல் 2 ஆட்டங்களில் விளையாடி 2 புள்ளிகளை இந்தியா பெற்றுள்ளது. தல் போட்டியில் தென் ஆப்பிக்காவிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

பாகிஸ்தானுக்கும், தென் ஆப்பிக்காவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை போட்டி நிடைபெறுகிறது.

ஸ்கோர்:

பாகிஸ்தான் - 45.3 ஓவல் 146 ரன்கள் (இம்ரான் நிசீர் 43, இன்சமாம் 41).

இந்தியா - 43.3 ஓவல் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள். (அசாருதீன் 54).

ஷார்ஜாவில் வியாழக்கிழமை நிடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 146 ரன்கள் எடுத்துள்ளது.

கோக-கோலா கோப்பைக்காக வியாழக்கிழமை நிடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் மோயின்கான் டாஸ் வென்று தலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

புதன்கிழமை நிடந்த தல் போட்டியில் தென் ஆப்பிக்காவிடம் தோற்ற இந்தியா, இப்போட்டியில் சிறப்பாகப் பந்து வீசியது. இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க டியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர்.

அணியில் ஸ்கோர் ஒன்றாக இருந்தபோது துவக்க ஆட்டக்காரர் சாஹித் அஃபிதி அவுட்டானார். உடனே அப்துர் ரசாக்கும் அவுட்டானார். 5 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தவித்தது. இம்ரான் நிசீரும், இன்சமாம் உல் ஹக்கும் நன்று ஆடியதால் பாகிஸ்தான் ஓரளவு ரன்கள் எடுத்தது.

இறுதியாக 45.3 ஓவல் 146 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இம்ரான் நிசீர் 43 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக இன்சமாம் உல்-ஹக் 41 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் பிரசாத், கும்ளே, ஜோஷி ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராபின் சிங், அகார்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய வீரர்களில் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் வீரர்கள் தொடர் இடைவெளியில் அவுட்டாகியவண்ணம் இருந்ததால், அதிக ரன்களைக் குவிக்க டியவில்லை.

தென் ஆப்பிக்காவுடன் ஆடிய இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீநிாத்துக்குப் பதிலாக வெங்கடேஷ் பிரசாத் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஸ்கோர்:

பாகிஸ்தான் 45.3 ஓவல் 146 ரன்கள். (இம்ரான் நிசீர் 43, இன்சமாம் உல்-ஹக் 41. கும்ளே, பிரசாத், ஜோஷி தலா 2 விக்கெட்டுகள்).

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+