வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே சண்டை : 33 பேர் சாவு
கொழும்பு:
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் 33 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 158 பேர் காயமடைந்தனர்.
யாழ்ப்பாண தீபகற்பத்தைக் கைப்பற்றும் நோக்கில் யானையிறவு கணவாயைக் கடந்து சென்ற போது இலங்கை ராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் பதிலுக்குத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் ராணுவத் தரப்பில் இழப்பு அதிகமானதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. மும்முனைப் பகுதியில் புலிகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
பலாலி அருகேயுள்ள ராணுவ முகாம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினரின் ராணுவ டாங்குகளும், ஆயுதங்களும் சேதமுற்றன.
புலிகளின் இத் தாக்குதலில் 33 ராணுவத்தினர் இறந்தனர். 158 பேர் காயமடைந்தனர். புலிகள் தரப்பில் எவ்வளவு பேர் இறந்தனர் என்ற தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications