வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆஸ்திரியாவில் பனிச்சரிவு: மலையேற்றப் பயிற்சியாளர்கள் 11 பேர் சாவு
நீடெர்ன்சில் (ஆஸ்திரியா):
ஆஸ்திரியா நாட்டில் காப்ருன் நகர் அருகேயுள்ள மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேற்றப் பயிற்சியாளர்கள் 11 பேர் இறந்தனர்.
சுமார் 500 மீட்டர் நீளமுள்ள பனிப்பாறைப் பகுதி மலையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சரிந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடந்த இச் சம்பவத்தில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11 பயிற்சியாளர்கள் பனியில் புதைந்து இறந்தனர்.
இறந்தவர்களில் 6 பேர் ஆஸ்திரியா, ஒருவர் பெல்ஜியம், இருவர் பின்லாந்து, ஒருவர் டென்மார்க், ஒருவர் ஸ்லோவாகியா நாட்டையும் சேர்ந்தவர்கள். ஆனால், பனிச்சரிவுக்கு 12 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தவிர, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சிலர் காணாமல் போய்விட்டனர். அவர்களும், பனியில் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மீட்புப் பணியில் 150 மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக 20 மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீண்டும் பனிச்சரிவு ஏற்படும் என்ற பயத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியை துவங்கியபோதே சம்பவம் நடந்த மலையின் மற்றொரு பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.