வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மாநகராட்சி பட்ஜெட் லீக்: காங். கவுன்சிலர் மீது போலீஸ் வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சி பட்ஜெட்"லீக்" ஆன விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு ச்ெய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பட்ஜெட் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. "லீக்" ஆனது பட்ஜெட் அல்ல என்று மாநகராட்சி மறுத்தாலும், அதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
"லீக்" ஆன பட்ஜெட் நகலை காங்கிரஸ் கவுன்சிலர் கராத்தே தியாகராஜன் தான் வெளியிட்டார். எனவே அவர் மீதும் மற்ற இரு ஊழியர்கள் மீதும் சென்னை பெரிய மேடு போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி நிதிக்குழுத்தலைவர் ஆர்.எஸ். ஸ்ரீதர் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் 166வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுளளது.