For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழக மீனவர் இலங்கையில் மரணம்
சென்னை:
கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் வெள்ளைச்சாமி ராஜா இலங்கையில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறத்து இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இறந்த வெள்ளைச்சாமி ராஜா, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.
வெள்ளைச்சாமி ராஜாவின் உடல் அடக்கத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாநில மீன்வளத்துறைக்கு, மாநில மீன் வளத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, March 29, 2000, 5:30 [IST]