For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம்: வாழப்பாடி புறக்கணிப்பு

சென்னை:

வாழப்பாடி ராமமூர்த்தி தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிமுதல் 7.30 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமமூர்த்தி, மதிமுக தலைவர் வைகோ, பாஜக தலைவர் இல.கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இக்கூட்டத்தைப் புறக்கணித்தார்.

ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் - வாழப்பாடி

முன்னதாக அவர் செவ்வாய்க்கிழமை காலை தன் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தன்னிடம் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்டால் மட்டுமே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று முடிவெடுத்தனர். கூட்ட முடிவின் நகல் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் இந்த முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதுதான் நாகரீகம். அதை விட்டுவிட்டு வாழப்பாடி ராமமூர்த்தி கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு தான் தன் கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் ஆலோசித்து அதை மனுவாக முதல்வரிடம் அனுப்பியிருப்பது தவறு. இனிமேல் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து அவரே முடிவு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X