வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஆண் வாரிசு இல்லாததால் வியாபாரி தற்கொலை
சென்னை:
இரண்டு பெண் குழந்தை இருந்தும், ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் "மார்வாடி" ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ்சந்த் (வயது 44). வட்டி தொழில் செய்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஆணாலும், தனது தொழிலை கவனிக்க ஆண் குழந்தை தேவை என பெரிதும் விரும்பினார். அதற்காக எல்லா வகையான மருத்துவ சிகிச்சைகளும் செய்து வந்தார். ஆனால், இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.
அந்த ஏக்கத்தில் வீட்டில் "டாய்லெட்" கழுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த ஆசிடை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications