வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
70 பேருக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் - ரஜினிக்கு பத்மபூஷன்; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்மஸ்ரீ விருது- ஜனாதிபதி வழங்கினார்
புது தில்லி:
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 பேருக்கு அவர்கள் தங்கள் துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ் விருதுகளை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் வழங்கினார்.
பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மபூஷன் விருதும், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. மொத்தம் 11 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், 20 பேருக்கு பத்மபூஷண் விருதும், 39 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற முக்கிய நபர்கள் விவரம்:
பத்மவிபூஷண்:
முதன்மை தேர்தல் அதிகாரி எம்.எஸ். கில், பொருளாதார நிபுணர் நந்தநாத் ராஜ், இந்திய விண்வெளி ஆய்வு நிலையத் தலைவர் கஸ்தூரி ரங்கன் உள்பட 11 பேருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
பத்மபூஷன்:
பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், குச்சுப்புடி நடனக் கலைஞர் ராஜா ரெட்டி, கைரேகை நிபுணர் பேராசிரியர் சேகரன், பத்திரிக்கையாளர் சாரதா பிரசாத் உள்பட 20 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
பத்மஸ்ரீ விருதுகள்
பாடகர் பண்டித் ஜேசுராஜ்
பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சிக்கந்தர் பக்த்
பத்திரிக்கையாளர் அனில் குமார் அகர்வால்
நடன கலைஞர்கள் ராதா மற்றும் ராஜா ரெட்டி
தொழிலதிபர் ரத்தன் நாவல் டாடா
திரைப்பட நடிகை ஹேமமாலினி
திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
திரைப்பட இயக்குநர் ராமானந்த் சாகர்
பிரபல பொருளாதார நிபுணர் ஜவஹர் பகவத்
எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன்
யு.என்.ஐ.