வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலங்கையில் விமான விபத்து : 40 ராணுவ வீரர்கள் பேர் சாவு
கொழும்பு:
இலங்கையின் அனுராதாபுரா நகருக்கு அருகே வியாழக்கிழமை காலை ஏற்பட்ட விமான விபத்தில் 36 ராணுவ வீரர்களும் 4 விமான சிப்பந்திகளும் இறந்தனர்.
விமான இன்ஜினில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானி தெரிவித்த அடுத்த சில நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
ரஷ்ய தயாரிப்பான இந்த விமானம், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமானது. வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலியிலிருந்து அனுராதபுரத்துக்குச் சென்று கொண்டிருந்தது. இதில் யானையிறவுப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த போரில் காயமடைந்த ராணவ வீரர்கள் இருந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications