வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆந்திராவில் வெடிவிபத்து : கல் உடைக்கும் தொழிலாளர்கள் 3 பேர் சாவு
ஹைதராபாத்:
கல் உடைக்கும் இடத்தில் வெடிபொருட்கள் திடீரென்று வெடித்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆந்திராவில் ரங்காரெட்டி மாவட்டம் மேட்கல் பகுதியில் புதன்கிழமை இரவு இவ் விபத்து நடந்தது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கல் உடைக்கும் பணிக்குத் தேவையான டெடனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பரிசோதகர் ஒருவர் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வெடிபொருட்கள திடீரென்று வெடித்தன.
விபத்தில் இறந்தவர்களுடைய முழு விவரம் தெரியவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.