வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்தது - தீர்ப்பு ஒத்திவைப்பு

திருச்சி:

அதிமுகவினரால் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. இவ் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

9 ஆண்டுகளுக்கு முன் திருச்சி வந்தபோது சிதம்பரம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, அதிமுகவினர் மீது திருச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கில் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் டி. ரத்தினவேல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜரத்தினம் உள்பட 64 பேர் அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் மாலா என்ற சாட்சி, வெளிநாட்டில் வசிப்பதால் அவரைத் தவிர மற்ற 63 பேரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. மாலாவுக்கு இந்தியத் தூதரகம் மூலம் சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தொடர்பான விசாரணை தனியே நடைபெற உள்ளது.

இதையடுத்து சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், இவ் வழக்கின் தீர்ப்பை மாஜிஸ்திரேட் முத்துசாமி வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தார்.

1991, ஆகஸ்ட் 16-ம் தேதி திருச்சி வந்த சிதம்பரம் மீது திருச்சி விமான நிலையத்துக்கு எதிரே அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+