வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
குட்டி பத்மினி - ஜெரால்டு பிரச்சனை தீர்ந்தது
சென்னை:
டிவி தொடர் தயாரிப்பாளர் குட்டிபத்மினிக்கும், டிவி டைரக்டர் ஜெரால்டுக்கும் இடையே நடந்து வந்த பிரச்சனை தீர்ந்தது. குட்டிபத்மினி தான் ஜெரால்டுக்குக் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி 1 லட்சத்தைக் கொடுத்தார்.
சன் டிவியில் மந்திரவாசல் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நாடகத்தைக் குட்டி பத்மினி தயாரிக்க ஜெரால்டு டைரக்ட் செய்தார்.
ஆனால் இதற்கிடையே அத்தொடர் தயாரிப்பதற்கான சம்பளம் ரூ 1 லட்சத்தை குட்டி பத்மினி எனக்குத் தரவில்லை. கேட்டதற்கு என்னை நடுரோட்டில் செருப்பால் அடித்தார் என்று ஜெரால்டு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து குட்டிபத்மினியும் ஜெரால்டு தன் அண்ணன்களுடன் வந்து தன்னை மிரட்டுவதாகப் போலீசில் புகார் கொடுத்தார். இருவருக்குமிடையேயிருந்த பிரச்சனை பூதாகரமானது.
இப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்படி இருவரும் பெப்சியில் புகார் கொடுத்தனர். இதையடுத்து பெப்சி தலைவர் கே.பாலச்சந்தர், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் முன்னிலையில் குட்டிபத்மினியும், ஜெரால்டும் தங்கள் பிரச்சனை குறித்து பேசித் தீர்த்துக் கொண்டனர். நடந்த விஷயத்திற்காக இருவரும் வருத்தம் தெரிவித்தனர்.
குட்டிபத்மினி தான் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை ஜெரால்டிற்குக் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications