வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நீதி வழியில் நடந்தால் குற்றம் சொல்கிறார்கள்: கருணாநிதி வேதனை
சென்னை:
தி.மு.க. அரசு பாரபட்சமற்ற அரசாக செயல்படுகிறது என்ற முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சட்ட சபையில் இன்று கடலூர் மாவட்டம் சூரப்ப நாயக்கன் சாவடி ரயில்வே நிலையம் அருகில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக த.மா..க உறுப்பினர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் உறுபபினர் ஹேமச்சந்திரன் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதிலளித்த முதல்வர் தி.மு.க. அரசு பாரபட்சமின்றி செயல்படுகிறது என்றார்.
முதல்வர் பதிலுரை வருமாறு:
எல்லாவற்றிற்க்கும் காவல் துறையை பொறப்பாக்கிவிட முடியாது. ஒரு சில இடங்களிலே சில குறைபாடுகளுடன் நடந்து கொண்டாலும், பல இடங்களிலே நிறைவடையக்கூடிய அளவிலே செயல் படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் குறைகளை, தீர்த்து வைப்பது ஆளுங்கட்சிக்குள்ள கடமை என்பதை நான் அறிவே. அமெரிக்க அதிபர் கிளின்டன் இந்தியாவிற்கு வருவதை கண்டித்து, தமிழ் நாடு விடுதலை ப் படை இயக்கத்தை சேர்ந்தவர்கள் குண்டு வைத்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இச்சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)என எழுதப்பட்டிருந்ததால், வெடிகுண்டு வைத்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் எனத் தவறாக கருதி அக் கட்சியின் தொழிற்தங்க அலுவலகத்தை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுளனர்.
தி.மு.க. விற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விரோத மனப்பானமை இருக்கிறது, கொள்கை மாறுபாடு இருக்கிறது என்பதற்காக காவல் துறையினர் வேண்டுமென்றே, மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வினரை விட்டுவிடுகிறார்கள் என்ற குற்றசாட்டு ஆதாரமற்றது.
மதுரை மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் சம்பத்தப்பட்டவர்கள் தி.மு.க. வினர் எனத் தெரிந்தும், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், குடவாசல் நிகழ்ச்சியில் ஒரு கம்யூனிஸ்ட் தோழர் கொல்லப்பட்டார். காரணம் அ.தி.மு.க.வினர். ஆனால் அப்படிப்பட்டவர்களோடு உறவு கொள்கிறீர்கள்.
தயவு தாட்சண்யம் இல்லாமல் யாரக இருந்தாலும் கட்சி சார்பின்றி, அதைப்பற்றி கவலைப்படாமல் நீதி வழி நட்க்கிற எங்கள் மீது குறை சொல்கிறீர்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும் நாங்கள் அற வழியில் தான் நடப்போம் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications