வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ராகிங் செய்பவர்களுக்கு 3 வருட கடுங்காவல் ரூ 25 ஆயிரம் அபராதம்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி:

ராகிங் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு 3 வருட கடுங்காவல் தண்டனையும், ரூ 25 ஆயிரம் அபராதமும் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ராகிங் செய்வதைத் தடுக்கும் வகைகயில் பல்கலைக்கழக மானியக் கமிஷன் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்திற்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து ராகிங் செய்யும் மாணவர்கள் அல்லது மாணவியர்களுக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 25 ஆயிரம் அபராதமும் விதிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கல்லூரி மாணவ மாணவியர் ராகிங் கொடுமைக்கு அதிக அளவில் பலியாகி வருகிறார்கள். அண்மையில் சிதம்பரம் மருத்துவப் பல்கலைக் கழக மாணவர் நாவரசு ராகிங் கொடுமையால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்களும் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகளை தடுத்து நிறுத்தும்படி பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு சிபாரிசு செய்தனர்.

இதைப் பரிசீலித்த பல்கலைக் கழக மானியக்குழுவினர் இப்பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்திற்கு மனுக்கொடுத்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தினர் ராகிங் செய்யும் கல்லூரி மாணவ மாணவியரை உடனடியாக அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு 3 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ 25 ஆயிரம் அபராதமும் விதிக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்தந்தக் கல்லூரிகளே இந்த விஷயங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்

இவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+