Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விடும் செயலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் விடுத்த பேச்சுவார்த்தைக்கானஅழைப்பையும் இந்தியா நிராகரித்து விட்டது.

டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரமீந்தர் சிங் ஜஸ்ஸால் இதுகுறித்துக் கூறியதாவது:

எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிரான வன்முறைப் போக்கையும் பாகிஸ்தான் கைவிட வேண்டும். அப்படிச் செய்யாதவரை அந்நாட்டுடன் நடக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் அர்த்தமானதாக இருக்காது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் இனாமுல் ஹக் வேண்டுகோளின் பேரில், இஸ்லாமாபாதில், அவருக்கும், இந்திய தூதர் பார்த்தசாரதிக்கும் இடையே பேச்சு நடந்தது. கூட்டத்தில், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க ஆர்வமுடன் உள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செயல்படுவதாகவும் ஹக் கூறினார்.

பாகிஸ்தானுடன் ஒற்றுமையாகவும், அதிையுடனும் செயல்படவே இந்தியா எப்போதும் விரும்பி வந்துள்ளது. டெல்லியின் விருப்பத்தின் பேரில் 1998-ல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூருக்கு பிரதமர் வாஜ்பாய் பஸ் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் குறித்து இந்தியா கொண்டுள்ள நல்லெண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டத் தாண்ட கார்கில் பகுதியில் பாகிஸ்தான் முயன்றது விதி மீறல் மட்டுமல்லாது, நம்பிகைத் துரோகமும் ஆகும்.

பாகிஸ்தானுக்கு எதிராக எந்த எண்ணத்தையும், திட்டத்தையும் இந்தியா கொண்டிருக்கவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் அமைதிக்கு பங்கம் விளைவக்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் இந்தியா ஆதரிக்காது. இதை பலமுறை பிரதமர் வாஜ்பாய் சுட்டிக் காட்டியுள்ளார்.

சீண்டினால் சரியான பதிலடி கிடைக்கும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பாகிஸ்தான் வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களைத் தூண்டி விட்டு வருகிறது. இருப்பினும் இந்தியா மிகவும் கட்டுப்பாட்டுடன் பொறுமை காத்து வருகிறது. தொடர்ந்து தனது வேலையை பாகிஸ்தான் செய்து வந்தால் அதற்குச் சரியான பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது. கடந்த கால அனுபவங்களை பாகிஸ்தான் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+