வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விடும் செயலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் விடுத்த பேச்சுவார்த்தைக்கானஅழைப்பையும் இந்தியா நிராகரித்து விட்டது.
டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரமீந்தர் சிங் ஜஸ்ஸால் இதுகுறித்துக் கூறியதாவது:
எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிரான வன்முறைப் போக்கையும் பாகிஸ்தான் கைவிட வேண்டும். அப்படிச் செய்யாதவரை அந்நாட்டுடன் நடக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் அர்த்தமானதாக இருக்காது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் இனாமுல் ஹக் வேண்டுகோளின் பேரில், இஸ்லாமாபாதில், அவருக்கும், இந்திய தூதர் பார்த்தசாரதிக்கும் இடையே பேச்சு நடந்தது. கூட்டத்தில், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க ஆர்வமுடன் உள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செயல்படுவதாகவும் ஹக் கூறினார்.
பாகிஸ்தானுடன் ஒற்றுமையாகவும், அதிையுடனும் செயல்படவே இந்தியா எப்போதும் விரும்பி வந்துள்ளது. டெல்லியின் விருப்பத்தின் பேரில் 1998-ல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூருக்கு பிரதமர் வாஜ்பாய் பஸ் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் குறித்து இந்தியா கொண்டுள்ள நல்லெண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டத் தாண்ட கார்கில் பகுதியில் பாகிஸ்தான் முயன்றது விதி மீறல் மட்டுமல்லாது, நம்பிகைத் துரோகமும் ஆகும்.
பாகிஸ்தானுக்கு எதிராக எந்த எண்ணத்தையும், திட்டத்தையும் இந்தியா கொண்டிருக்கவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் அமைதிக்கு பங்கம் விளைவக்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் இந்தியா ஆதரிக்காது. இதை பலமுறை பிரதமர் வாஜ்பாய் சுட்டிக் காட்டியுள்ளார்.
சீண்டினால் சரியான பதிலடி கிடைக்கும்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பாகிஸ்தான் வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களைத் தூண்டி விட்டு வருகிறது. இருப்பினும் இந்தியா மிகவும் கட்டுப்பாட்டுடன் பொறுமை காத்து வருகிறது. தொடர்ந்து தனது வேலையை பாகிஸ்தான் செய்து வந்தால் அதற்குச் சரியான பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது. கடந்த கால அனுபவங்களை பாகிஸ்தான் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications