தமிழகத்தில் இன்று
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கியது
சென்னை:
தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிதிங்கள்கிழமை துவங்கியது.
முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இப் பணியில் கடுமையான வெயிலையும்பொருட்படுத்தாமல் சுமார் ஒரு லட்சம் பணியாளர்களும், 20 ஆயிரம்கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் தமிழகத்தில் எவ்வளவு கட்டடங்கள் உள்ளன.எவ்வளவு குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் உள்ள அடிப்படை வசதிகள் என்னஎன்பது பற்றி அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன.
இம் மாத இறுதிக்குள் முடியும் வகையில் இப் பணி தீவிரமாகமேற்கொள்ளப்படவுள்ளது. முதல் முறையாக, குடிசைப் பகுதிகளைப் பற்றியும்தகவல்கள் திரட்டப்படுவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் சி.சந்திரமெளலி தெரிவித்தார்.
இப் பணி முடிந்தவுடன் அனைத்துத் தகவல்களும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.இரண்டாம் கட்டப் பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி துவங்கி, 28-ம்தேதியுடன் முடிவடையும்.
யு.என்.ஐ.