தமிழகத்தில் இன்று
அயோத்தி ராமர் கோயில் மாதிரி ஜனவரியில் முடிவு செய்யப்படும் - விஷ்வஹிந்து பரிஷத்
டெல்லி:
அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலின் மாதிரி (மாடல்) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி செய்யப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்அமைப்பின் முக்கியப் பிரதிநிதி ஆச்சார்ய தர்மேந்திர மஹராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஹிந்து மதத் தலைவர்கள் கூட்டம் ஜனவரி மாதம் பிரயாகையில் நடைபெற உள்ளது. அப்போது, உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படவுள்ளராமர் கோயிலின் மாதிரி இறுதி செய்யப்படும். ராமர் கோயில் கட்டுவது என்பது மத சம்பந்தமானது. இப் பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் தலையிடமுடியாது.
வாஜ்பாய் சிறந்த தலைவர். அவர் நாட்டின் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சமாளிக்கவும், வறட்சி பாதித்த மக்களின் நலனுக்காகவும்எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கோயில் கட்டும் பணியில் அவர் தலையிடமுடியாது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஹிந்து மதத் தலைவர்களுக்கு உதவி செய்யப்படும் என்று பாஜக கூறியதால்தான் மக்களவைத் தேர்தலில்பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தது என்பதை பிரதமர் மறந்துவிடக்கூடாது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிப்பதை ஹிந்து மதத் தலைவர்கள் தங்களது உரிமையாகவும், முக்கியப் பணியாகவும் கருதுகின்றனர். ராமர் கோயில்கட்டும் பிரச்சினை தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு எந்த வகையிலும், கோயில் கட்டும் பணியைக்கட்டுப்படுத்தாது. ஹிந்து மதத் தலைவர்கள்தான் இது பற்றி இறுதி முடிவு எடுக்க முடியும்.
இடிக்கப்பட்ட இடத்திலேயே பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்அவர் மசூதி கட்டிக் கொள்ளட்டும். ஆனால், ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவர் மசூதி கட்டமுடியாது என்றார் அவர்.
ராமர் கட்டப்படவுள்ள இடத்தில் இருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி ஹிந்து மதத்தினர் இடித்துத் தரைமட்டமாக்கினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications