கிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது

Subscribe to Oneindia Tamil

நடிகர் அஜீத்குமார் பிறந்த நாள் விழாவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கூடியதால் பெரும்கலாட்டா ஏற்பட்டது. அஜீத்தின் கார் கண்ணாடி, திருமண மண்டப ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.நெரிசலில் பெண் போலீசார் மீது விழுந்த ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

ரசிகர்களுடன் இரவு வரை இருந்து பிறந்த நாளை கொண்டாடத் திட்டமிட்டிருந்த அஜீத், கலாட்டா காரணமாகபாதியில் விழாவை முடித்துக் கொண்டு வெளியேறினார்.

அஜீத்தின் 29வது பிறந்த நாள் விழா ரசிகர்கள் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள கோல்டன் பேரடைஸ்திருமண மண்டபத்தில் நடந்தது. அஜீத் வருவதற்கு முன்பாகவே பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ரசிகர்கள்மண்டபத்தில் நிறைந்திருந்தனர்.

பிற்பகல் 2.30 மணியளவில் ரசிகர்களை சந்திக்க புது மனைவி ஷாலினியுடன் அஜீத் காரில் வந்திறங்கினார்.அவரது காரை சுற்றி சூழ்ந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தி, பெருங் கூட்டத்திற்கிடையில் அஜீத் -ஷாலினியை மேடைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அஜீத்தை பார்க்க ஏராளமான ரசிகைகளும்வந்திருந்தனர்.

ரசிகர்கள் கூட்டத்தையும், நெரிசலையும் பார்த்த அஜீத், முதல் வேலையாக தனது மனைவி ஷாலினியை தனிக்காரில் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். ரசிகர்கள் கூட்டம் மண்டபத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் நிரம்பி வழிந்தது. மண்டபத்தில் உள்ளே இருந்தவர்கள் அஜீத்தை பார்த்து விட்டு வெளியே வராமல்உள்ளேயே நின்று கொண்டிருந்தனர்.

இதனால் வெளியே காத்திருந்த ரசிகர்கள் உள்ளே புக முண்டியடித்தனர். இந்த நெரிசலில் பாதுகாப்பிற்குவந்திருந்த பெண் போலீசார் மீது ரசிகர்கள் விழுந்தனர். அவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர்.

நெரிசலை பார்த்து பயந்து போன அஜீத், ரசிகர்கள் மத்தியில் பேசி விட்டு வெளியேறலாம் என்று நினைத்தார்.ஆனால், அந்த கூட்டத்தில் மைக் வயர் அறுந்து கிடந்தது. அதனால் மைக் வேலை செய்யவில்லை. எரிச்சலைடந்தஅஜீத், மாடியில் இருந்த அறையில் பாதுகாப்பாக நுழைந்து கொண்டார்.

அரை மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மேடைக்கு வந்தார். ரசிகர்களை பார்த்து நன்றி தெரிவித்தார். அப்போதுவெளியில் நின்று கொண்டிருந்த அஜீத் கார் மீது ரசிகர்கள் ஏறி, அஜீத்தை பார்த்து கையசைக்க முயன்றனர். அதில்ஓரிருவர் தவறி கீழே விழுந்ததில், கார் கண்ணாடி நொறுங்கியது.

இதற்கிடையில் நெரிசலை சமாளிக்க திருமண மண்டப கதவுகள் மூடப்பட்டன. கண்ணாடியால் ஆன அந்தகதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே மூச்சு திணறியவர்கள் வெளியே வந்தனர். இவ்வளவு நெருக்கடிகளுக்குபின்னர் 4 மணியளவில் அஜீத் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.

""சினிமா என்பது முக்கியமல்ல. அது ஒரு பொழுது போக்கு மட்டுமே. எனக்கு பலமே ரசிகர்கள் கூட்டம் தான்.தாய், தந்தை, குடும்பம் இவற்றிற்கு பிறகு தான் நீங்கள் ரசிகராக இருக்க வேண்டும். கண்தானம், ரத்த தானம் செய்துமற்றவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். அதை விட முக்கியமானது உழைப்பு. அதை ஒரு நாளும் நீங்கள் மறந்துவிடக் கூடாது என்று பேசினார். பின்னர் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+