குரேஷியா கோப்பைக் கால்பந்து இறுதி ஆட்டம்: ரசிகர்கள் மோதலில் 100 பேர்காயம்
ஸாக்ரெப்:
குரேஷியாவில் புதன்கிழமை நடைபெற்ற குரேஷியா கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டதில்போலீஸார் உள்பட 100 பேருக்கு மேல் காயமடைந்தனர். இதனால், இறுதிப் போட்டி கைவிடப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக 98 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இறுதிப் போட்டியில் டைனமோ ஸாக்ரெப் அணியும், ஹாஜ்டுக் ஸ்பிலிட் அணியும் மோதின. ஹாஜ்டுக் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில்இருந்தபோது இரு அணிகளின் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலைத் தடுக்க பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மோதலில் ஈடுபட்ட ரசிகர்களை அவர்கள் தடியடி நடத்திகலைத்தனர். இதனால், இறுதிப் போட்டி தடைபட்டது.
மைதானத்தை விட்டு வெளியே ஓடிய ரசிகர்கள், வழியில் இருந்த கடைகளையும் தாக்கினர். வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கியதில், அவற்றின்கண்ணாடிகள் உடைந்தன.
இம் மோதலில் 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மோதலைத் தடுக்க முயன்ற போலீஸாரும் காயமடைந்தனர். இச் சம்பவம்தொடர்பாக 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது கட்ட இறுதிப் போட்டி மே 16-ந் தேதி நடைபெற உள்ளது.