தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையின் வடபகுதியில் உள்ள முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தைத் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் விடுதலைப் புலிகள் தீவிரமாகஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக, அவர்கள் யாழ் நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர். அந்நகரை நோக்கிச் செல்லும் முக்கியமான கடற்கரைச் சாலையை அவர்கள் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் மீண்டும் கைப்பற்றிய யானையிறவுக்கும், கிலாலி ராணுவமுகாமுக்கும் இடையேயான இச் சாலையின் 12 கிலோமீட்டர் நீளம் தற்போது புலிகள்வசமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தை நோக்கி தெற்கு கடற்கரையோரமாகவும் முக்கிய சாலைகள்வழியாகவும் புலிகள் முன்னேறி வருகின்றனர்.
கிலாலி தற்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இருவாரத்தில் யானையிறவு மற்றும் பாலை பகுதிகளை ராணுவத்திடமிருந்து விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
அடுத்து முக்கியமான கிலாலி ராணுவ முகாமைக் கைப்பற்றும் முயற்சியில் புலிகள்ஈடுபட்டுள்ளனர். கிலாலி முகாமை புலிகள் கைப்பற்றிவிட்டால், அடுத்து யாழ் நகரைஅவர்கள் எளிதாக பிடித்துவிடுவார்கள் என்று கருதப்படுகிறது.
இதனால், கிலாலி பகுதியில் இலங்கை ராணுவத்தினர் அதிக அளவில்நிறுத்தப்பட்டுள்ளனர். அவ்வப்போது புலிகளின் ராக்கெட் தாக்குதலைச் சமாளித்துராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கிலாலி முகாமைச் சுற்றி கடும் சண்டை நடந்து வருவதாக புலிகள் வானொலிதெரிவித்துள்ளது.