தமிழகத்தில் இன்று
இலங்கை ராணுவத்தினரை மீட்க இந்தியா ராணுவம் உதவி செய்யக்கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை:
யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளால் சூழப்பட்டுள்ள சிங்கள சிப்பாய்களை மீட்க இந்தியா ராணுவம் உதவி செய்யக்கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகளின் வசம் இருந்த யாழ்பாணத்தை 1996 ம் ஆண்டு இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
இதை மீட்க விடுதலைப்புலிகள் கடும் முயற்சி எடுத்து வருவதுடன் கடந்த ஒரு வார காலமாக ராணுவத்தினரிடம் ஆவேசமாக சண்டையிட்டு வருகின்றனர்.
தற்போது விடுதலைப்புலிகள் 40 ஆயிரம் சிங்கள சிப்பாய்களை சுற்றிவளைத்துள்ளனர். விடுதலைப்புலிகளிடம் சிக்கித் தவிக்கும் சிப்பாய்களை உயிரோடு மீட்கஇலங்கை அரசு இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக பிரதமர் வாஜ்பாய் மந்திரிசபைக் கூட்டத்தைக் கூட்டினார். அப்போதுஇலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
இதை நான் ஆமோதிக்கிறேன். இந்தியா கண்டிப்பாக இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கக் கூடாது மேலும் ஆயுத உதவிகளும் செய்யக்கூடாது.
அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் எந்த உதவி செய்தாலும் இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது என்று கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications