For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மே 8-ம் தேதி புதுவையில் வெற்றி மாநாடு - மூப்பனார், ஆஸாத், நல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுவை:

புதுவையில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உருவானதன்நினைவாக மே 8-ம் தேதி வெற்றி மாநாடு நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் பி.சண்முகம் தெரிவித்தார்.

புதுவை மாநிலத்துக்கு 2000-2001-ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு பற்றி இறுதிசெய்ய புது தில்லி செல்லும் முன் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:

புதுவையில் காங்கிரஸ்-தமாகா கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. இதை நினைவுகூறும்வகையில் மே 8-ம் தேதி வெற்றி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபிஆஸாத், அனில் சாஸ்திரி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர்கலந்து கொள்கின்றனர்.

புது தில்லியில் திட்ட ஒதுக்கீடு குறித்து திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த்துடன் ஆலோசனை நடத்த உள்ளேன். புதுவை மாநில வளர்ச்சிக்கு ஏற்ற வகையில்அதிக நிதி ஒதுக்கும்படி கேட்டுக் கொள்வேன். கிராமப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல்விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளும் கருத்தில் கொள்ளப்படும்.

திட்ட ஒதுக்கீடு குறித்து ஏற்கெனவே பந்த்துடன் பேசியுள்ளேன். நிச்சயம் புதுவைக்குஅதிக நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவையில் சமச்சீர் விற்பனை வரியை அமல்படுத்துவதை புதுவை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறேன். நிச்சயமாக, எந்த வகையிலும் மக்களுக்குப்பாதிப்பு ஏற்படும் வகையில் புதுவை அரசு செயல்படாது என்றார் சண்முகம்.

முதல்வருடன் பொதுப் பணித்துறை அமைச்சர் பி. கண்ணன், தலைமைச் செயலர் டி.டி.ஜோசப், வளர்ச்சித் துறை ஆணையர் பத்மநாபன், திட்ட இயக்குநர் ஸ்ரீதரன் ஆகியோர்தில்லி சென்றுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X