For Daily Alerts
Just In
மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
இலங்கைக்கு உதவ தயார் என்கிறது பாகிஸ்தான்
கொழும்பு:
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைகப்பட்டுள்ள 40,000 இலங்கைராணுவ வீரர்களை கப்பாற்றவும் இலங்கை அரசுக்கு உதவவும் பாகிஸ்தான் முன்வந்துள்ளது.
விடுதலைப் புலிகளை ஒடுக்க ராணுவத்துக்கு உதவும்படி அண்டை நாடுகளுக்குஇலங்கை அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் இதை அறிவித்துள்ளது.ஆனால், இலங்கை அரசு எவ்வித உதவியைக் கோரியது, பாகிஸ்தான் எந்த வகையில்உதவி செய்யும் என்பதை அந் நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்தெரிவிக்கவில்லை.
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், இறையான்மைக்கும் பாகிஸ்தான் ஆதரவுஎப்போதும் உண்டு அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் கடந்த 12ஆண்டுகளுக்கும் மேலாக போரிட்டு வரும் இலங்கை ராணுவத்துக்கு பாகிஸ்தான்ஆயுத சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டி.பி.ஏ.
Comments
Story first published: Thursday, May 4, 2000, 5:30 [IST]