மே.இ. தீவுகள்-பாக். டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்: போர்டாவில் முதல் டெஸ்ட்
ஜார்ஜ்டவுன்:
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான டெஸ்ட்கிரிக்கெட் தொடர் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.
போர்டாவில் முதல் டெஸ்ட் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும்நியுசிலாந்து அணிகளிடம் படுதோல்வியைச் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிதற்போது புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஜிம்மி ஆடம்ஸ் தலைமையில்டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
பாகிஸ்தானும், உள்நாட்டில் இலங்கையிடம் படுதோல்வியைச் சந்தித்த பிறகு,மேற்கிந்தியத் தீவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரை வென்றமகிழ்ச்சியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இரு நாடுகளும், சமீபத்தில் விளையாட டெஸ்ட் தொடர்களில் தோல்விகண்டுள்ளநிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லும் ஆசையில்களமிறங்குகின்றன.
இந் நிலையில், போர்டாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.இருப்பினும், போட்டி நடைபெறும் நாட்களில் மழை இருக்காது என்று போட்டிஅமைப்பாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஷிவ்நாராயண் சந்தர்பால் மீண்டும் இடம்பிடித்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் சமீபத்திய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் விளையாடுவதுமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர்விளையாடவில்லை. காலில் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதுஅந்த அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படும் அதே வேளையில், சுழற்பந்து வீச்சாளர்முஷ்டாக் அகமத் அந்த அணியில் விளையாடுகிறார்.
சமீபத்திய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாகப் பந்து வீசி பாகிஸ்தான் அணிக்குஅவர் வெற்றித் தேடித் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடரில் அவர் 20முதல் 30 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்ப்பதாக அணியின்பயிற்சியாளர் மியான்தத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications