தமிழகத்தில் இன்று
சென்னை:
விஜயகாந்த் நடித்து சமீபத்தில் வெளியாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வல்லரசுபடத்தின் திருட்டு விடியோ சி.டி.க்களை தயாரித்து விற்றதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2370 திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
சென்னையில் புதிய திரைப்படங்களின் திருட்டு விடியோ சி.டி.க்கள் விற்கப்படுவதாகசென்னை மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. மேலும், சி.டி.க்கள்எல்லாம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு சென்னைக்குக் கடத்தப்படுவதாகத்தெரிந்தது.
உடனே, சுங்கத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியில்குற்றப்பிரிவுப் போலீஸார் ஈடுபட்டனர். இந் நிலையில், மலேசிய ஏர்லைன்ஸ்விமானம் மூலம் சென்னை வந்த மலேசியாவைச் சேர்ந்த சிராஜ் பின் அபுதாலிஃப்பிடம்போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் வல்லரசு படத்தின் திருட்டு விடியோ சி.டி.க்கள் 735 இருந்தன.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில்அவருடன் விமானத்தில் வந்த நஸ்மா, அன்சார் பெய்க், குத்ரத்துல்லா ஆகியோரிடம்போலீஸார் சோதனை நடத்தினர். அவர்களிடமும் வல்லரசு படத்தின் சி.டி.க்கள்இருந்தன.
4 பேரிடமிருந்தும் மொத்தம் 2370 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications