For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்

By Staff
Google Oneindia Tamil News

அதிமுக முன்னாள் எம்.பி பேத்தி கொலை: வாலிபர் கைது

சென்னை:

அதிமுக முன்னாள் எம்.பி.யின் ஒன்றரை வயது பேத்தியை குத்திக் கொலை செய்ததாக உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. திண்டுக்கல் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன். அதிமுகவை சேர்ந்தவர்.இவரது மகன் பாலமுருகன்.

இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது.

பாலமுருகனின் மனைவி புவியரசி, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். பிரசவத்திற்காக சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்குகுழந்தை நிவேதாவுடன் வந்திருந்தார்.

புவியரசின் தம்பி இளம்பரிதி. இவர் வேலையில்லா பட்டதாரி. சமீபத்தில் தான் இவரது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் வேலை எதுவம்தேடாமல் இருப்பதை உறவினர்கள் கண்டித்தனர்.

சம்பவத்தன்று அக்கா புவியரசி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி இளம்பரிதி, நள்ளிரவில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தசகோதரியின் குழந்தை நிவேதாவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக இளம்பரிதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X