கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
பெங்களூர்:
ஈ-மெயில் மூலம் அனுப்பப்படும் கம்ப்யூட்டர் வைரஸ் வியாழக்கிழமை உலகம்முழுவதிலுமுள்ள கம்ப்யூட்டர்களுக்கு மிரட்டல் விடுத்தது.
"ஐ லவ் யூ என்று பெயரிடப்பட்டள்ள இந்த வைரஸ், ஈ மெயில் மூலம்அனுப்பப்பட்டது. இந்த ஈ மெயிலைப் பிரித்து படித்த பலருடைய கம்ப்யூட்ர்கள்செயலிழந்தன. இதனால் உலகம் முழுதும் பல இடங்களில் வங்கிகள், பங்குமார்க்கெட்டுகள், சாப்ட்வேர் நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
முதலில் ஆசியாவில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டது. இதனால் ஈ மெயில்இணைப்புகள் ஸ்தம்பித்தன. இந்த வைரஸ் உள்ள ஈ மெயிலில் தயவு செய்து இந்தமெயிலில் இணைக்கப்பட்டுள்ள காதல் கடிதத்தைப் பிரித்துப் பாருங்கள் என்றுகூறப்பட்டிருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவர்களுடைய கம்ப்யூட்டரில் வைரஸ்பாதித்தது.
ஸ்வீடனில் 80 சதவீத கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பாதித்தது. ஜெர்மனியில் 70சதவீத கம்ப்யூட்டர்களும், இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு கம்ப்யூட்டர்களும்பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு மெலிசா வைரஸ் கம்ப்யூட்டர்களைப் பாதித்தது.அதை விட இரண்டு மடங்கு அதிக பாதிப்பு இப்போது இருந்ததாக கூறப்பட்டது.
வியாழக்கிழமை பிற்பகல் ஹாங்காங்கில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.இந்தியாவில் பாதிப்பு குறித்து முழுமையான தகவல் இல்லை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications