For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தமிழக பாரதீய ஜனதா புதிய தலைவர் இன்று பதவியேற்பு
சென்னை:
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக டாக்டர் எஸ்.பி. கிருபாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் சனிக்கிழமை இந்தப் பொறுப்பை ஏற்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் 1989ம் ஆண்டில் பாரதீய ஜனதாகட்சியில் சேர்ந்தார். முதலில் கடலூர் மாவட்டத் தலைவராக இருந்த இவர் பின்னர் மாநில அளவில் துணைத் தலைவரானார்.
மருத்துவரான இவர் எம்.எஸ்., எப்.ஐ.சி.எஸ். பட்டங்கள் பெற்றவர். தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகதாழ்த்தப்ப்டட ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Comments
Story first published: Saturday, May 6, 2000, 5:30 [IST]