தமிழகத்தில் இன்று
சென்னை:
அதிமுகவின் புதிய அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் காளிமுத்து நியமிக்கட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் மறைவுக்கு பின்னர் காலியாக இருந்த இப்பதவிக்கு காளிமுத்துவை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாநியமித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை சனிக்கிழமை செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காளிமுத்து தற்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். அவைத் தலைவராக நெடுஞ்செழியன் நீண்ட நாட்கள் இருந்து வந்தார். அவரதுமறைவுக்கு பின்னர் அந்த பதவிக்கு யாரையும் ஜெயலலிதா நியமிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நடந்த செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக கட்சி அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டம் குரும்பாப்பாளையம் கிளைக் கழகச் செயலாளர்சின்னசாமி மகன் ராஜி - இந்திராணி ஆகியோர் திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications