தமிழகத்தில் இன்று
லாகூர்:
அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ராணுவ ஆட்சிதான் முயற்சி எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவிகுல்சூம் நவாஸ் கூறியுள்ளார்.
லாகூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தற்போதைய ராணுவ ஆட்சி கெளரவமான முறையில் பொறுப்பிலிருந்து விலகி, ஜனநாயக ஆட்சி ஏற்பட வேண்டும். இதுதொடர்பாக அரசியல்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ராணுவ ஆட்சிதான் முயற்சி எடுக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு வலுவான நிலையில் உள்ளது.
அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்தால் அதற்குப் பலன் இருக்காது. அதை யாரும் பொருட்படுத்தவும் மாட்டார்கள்.
ராணுவ ஆட்சி இப்போதைக்கு நீங்கும் என்று நான் நம்பவில்லை. அப்படி இருப்பதாக இருந்தால், அவர்கள் புரட்சியே செய்திருக்க மாட்டார்கள்.
நவாஸ் ஷெரீப் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக கருத்துச் சொல்ல முயலும் மக்கள் மிரட்டப்படுகிறார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் உள்ளனர். எந்தப்பயமும் இல்லாத சூழ்நிலை உருவானால், நவாஸுக்கு ஆதரவாக மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள்.
பாகிஸ்தானில் திடீர் தேர்தல் நடந்தால் அதைச் சந்திக்க பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தயாராக உள்ளது. மக்கள் ஆதரவு எங்களுக்கு நன்றாகஉள்ளது. இருப்பினும் இப்போது தேர்தலுக்கு அவசரம் அல்ல. முதலில் ஜனநாயகம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.