தமிழகத்தில் இன்று
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு இந்தியா உதவக் கூடாது என்ற நிலைக்கு பெரும்பாலானதமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரிந்து கிடக்கும் இந்த கட்சிகள் அனைத்துமே இந்த விஷயத்தில் ஒன்று கூடியுள்ளன.
தமிழகத்தில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு நண்பர்கள் அதிகமில்லை. தமிழகத்தின் 3 முக்கிய கட்சிகள்கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாலும் அந்தக் கட்சிகள் அனைத்துமே இலங்கை அரசுக்கு உதவக் கூடாது என்ற நிலைஎடுத்துள்ளதாலும் பிரதமர் வாஜ்பாய் இவ் விஷயத்தில் இலங்கைக்கு உதவ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
திமுக, மதிமுக, பாமக மட்டுமின்றி மாநில பாரதீய ஜனதா கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் இதே நிலையைத் தான்எடுத்துள்ளன.
இதில் பாமக மிகத் தீவிரமாகவே புலிகளை ஆதரித்து வருகிறது. தனி ஈழம் அமைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுளளார்.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எப்.) பொதுச் செயலாளர் ஞானசேகரன் கூறுகையில்,இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு டிமோர் பிரிந்தது மாதிரி நடவடிக்கை எடுத்து இலங்கையிலிருந்து ஈழத்தைப் பிரிக்கவேண்டும் என்றார். இதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றார்.
தமிழகத்தில் சுப்பிரமணிய சுவாமி மட்டும் தான் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறி வருகிறார்.முக்கிய கட்சியான அதிமுக தலைவர் ஜெயலலிதாவிடமிருந்து இவ்விஷயம் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் வரவில்லை.
இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு:
இந்நிலையில் இலங்கையையொட்டிய தனது கண்காணிப்பை இந்திய கடற்படை தீவிரப்படுத்தியுள்ளது. யாழ்பாணத்திலிருந்துபடகு மூலம் தப்பி வந்த 14 அகதிகளை கடற்படை மீட்டு ராமநாதபுரம் கொண்டு வந்தது.