தமிழகத்தில் இன்று
கொழும்பு:
பலாலி விமான நிலையத்தின் 5 கி.மீ. தூரத்தில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டுளளனர் என இலங்கையின் மூத்த அமைச்சர்ஒருவர் கூறினார்.
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளை தங்களால் சமாளிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
யாழ்பாணத்திலிருந்து வீரர்களை காப்பாற்ற வெளிநாட்டு ராணுவத்தின் உதவி தேவையில்லை. அது போன்ற ஒரு நிலைஏற்பட்டால் பிறரது உதவியைக் கோருவோம். இதுவரை இவ் விஷயத்தில் இலங்கை அரசுக்கு பிற நாடுகளிடமிருந்து நல்லஆதரவு கிடைத்துள்ளது.
யாழ்பாணத்தை விடுதலைப் புலிகள் சுற்றி வளைக்க முடியாது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதை சமாளிக்க அரசு சிலதிட்டங்களை தீட்டியுள்ளது. ஆனால், அது குறித்து இப்போது ஏதும் கூற முடியாது.
இப்போதைக்கு பலாலி விமான நிலையம் விடுதலைப் புலிகளின் தாக்குதல் பகுதிக்குள் இல்லை. இன்னும் 5 கி.மீ. தூரம் அவர்கள்முன்னேறினால் விமான நிலையத்தை அவர்களால் தாக்க முடியும். யாழ்பாணத்தில் ராணுவம் தன்னை நன்றாக நிலை நிறுத்திக்கொண்டுவிட்டது. எனவே, புலிகள் தான் அங்கிருந்து தப்பியோடி வருகின்றனர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ராணுவத்தினர் தொடர்ந்து புலிகளுடன் மோதி வருகின்றனர். தனகிளப்பு பகுதியில் புலிகள் மீதுராணுவத்தினர் கடும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் இஸ்ரேலுடன் இலங்கை தனது உறவை வலுப்படுத்திக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. எங்களுக்குஇஸ்ரேல் எப்படி உதவப் போகிறது என்பது குறித்து இப்போது ஏதும் கூறத் தயாராக இல்லை என்றார் அந்த மூத்த அமைச்சர்.
பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அனிருத்த ரத்வதே கூறுகையில், யாழ்பாணத்தை எந்த நிலையிலும் புலிகளிடம் ஒப்படைக்கமாட்டோம். மக்கள் தங்களால் இயன்ற அளவுக்கு நாட்டுக்கு உதவ வேண்டும். சிலருக்கு பயம் கூட ஏற்பட்டுவிட்டது. மக்கள்யாரும் எதற்கும் அஞ்ச வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
தேசிய பாதுகாப்பு நிதிக்கு நிதி சேகரிக்க நடந்த கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.












Click it and Unblock the Notifications