தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியாவுடன் போர் புரியத் தயார்: மு
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் போர் புரிய தயாராக இருப்போம் என்று ராணுவ தளபதிகள் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிபர் முஷாரப் கூறினார்.
71-வது ராணுவ தளபதிகளின் கூட்டம் ராவல் பிண்டியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பாகிஸ்தான் ராணுவ அதிபர் முஷாரப் தலைமை தாங்கினார்.
பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷரப்பேசினார்.
அவர் அப்போது கூறியதாவது:-
இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இந்தியாவுடன் போர் உள்ளிட்டஎல்லாவித சூழ்நிலைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு முஷரப் பேசினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications