தமிழகத்தில் இன்று
டெல்லி:
கடந்த ஆண்டு டிசம்பரில் காத்மாண்டுவிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதையடுத்து நேபாளத்துக்குநிறுத்தப்பட்ட விமான சேவையை இந்தியா மீண்டும் துவக்கவுள்ளது.
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சக்ர பிரசாத் பஸ்டோலா டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிஙகை சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்தையின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 24ம் தேதி கக்தமாண்டுவிலிருந்து டெல்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் உதவியுடன்ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தினர். இதையடுத்து அந் நாட்டுக்கு விமான சேவையை இந்தியா ரத்து செய்தது.
நேபாள நாட்டு விமான நிலையங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாதுகாப்பைபலப்படுத்த நேபாளம் நடவடிக்கை எடுத்தது. வெளிநாட்டு விமானங்களுக்கு இப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகஇந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமிந்தர் சிங் ஜஸ்வால் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.