தமிழகத்தில் இன்று
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர்கள் வருடம் ஒன்றிற்கு 1.48 கோடிக்கு டீ குடிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சராசரியாகப் பார்க்கப் போனால் உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா அமைச்சரவையில் நாள்ஒன்றிற்கு அனைத்து அமைச்சர்களும் சேர்த்து 150 - 200 கப் டீ குடிக்கின்றனர்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சிகள் முதல்வர் ராம்பிரகாஷ் குப்தாவிடம் கேள்விஎழுப்பினர். உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் உள்பட 91 மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளனர்.
இவர்களில் முதல்வர் தவிர 90 அமைச்சர்களுக்கும் ஒதுக்கும் பட்ஜெட் ஆண்டுதோறும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில்அதிகரித்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் நடத்தும் ஆடம்பர வாழ்க்கைக்கே மக்களிடமிருந்து வசூலிக்கப்படும்வரிப்பணத்தின் பெரும் பகுதி போய்விடுகிறது.
அமைச்சர்கள் ஒவ்வொருவரின் ஆடம்பரத் தேவைக்காக மாதம் ஒன்றிற்கு ஒரு அமைச்சருக்கு 3 லட்ச ரூபாய்செலவிடப்படுகிறது. ஆண்டு ஒன்றிற்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படும் இதரப்படி ரூ 10, 000 என்றுஅமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதுவும் லட்சக்கணக்கில் செலவாகிவிடுகிறது. இதைஅமைச்சர்கள் தங்களது இருப்பிடத்திற்கும், புதிய பங்களாக்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரமோத் திவாரி இதுகுறித்து நீச்சல்குளத்துடன் கூடிய பங்களாஅமைப்பதற்கும் நீச்சல்குளத்தில் குளித்துக் கொண்டே டீ அருந்துவதற்கும் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும்வரிப்பணத்தில் பெரும்பாலும் அடங்கி விடுகிறது என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
பல தொகுதிகளில் இருந்து அமைச்சர்களைச் சந்திக்க வருபவர்களுக்கு அமைச்சர்கள் தங்கள் சொந்தக் காசில் டீயும், சிற்றுண்டியும் வாங்கிக்கொடுப்பார்களா? ஆனால் அரசுச் செலவில் அவர்களுக்கு ராஜமரியாதைஅளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இதுகுறித்துத் தெரிவித்த முதல்வர் ராம்பிரகாஷ்குப்தா கூறுகையில் அமைச்சர்களுக்குச் செலவிடப்படும்ஆடம்பரச் செலவுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications