தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ரயில்வே திட்டங்களுக்கு சீனா ரூ 400 மில்லியன் முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சீனா ரயில்வே நிர்வாகச் சேர்மன் மற்றும் செயலாளர் ஜவாத் ஷெரீப் இத்தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கிடையே நட்புறவை வளர்க்கும் விதத்தில் இருநாடுகளும் ரயில்வேத் துறையில் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக பாகிஸ்தானின் ரயில் திட்டத்தில் சீனா முதலீடு செய்வதற்குச் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ 400 மில்லியனுக்கான ஒப்பந்தம் தலைநகர்பீஜிங்கில் கையெழுத்தானது. இது குறித்து நடக்கும் விவாதத்தில் கலந்து கொள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர் ஷாகாத் அசீஸ் சீனாவிற்கு வரும் 15 முதல் 19வரை 5 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிறார். அப்போது இந்த முதலீடு குறித்து மிகத் தெளிவாக விவாதம் நடத்துவார்.
மேலும் சீனாவிலுள்ள ரயில்வே நிபுணர்கள் பாகிஸ்தான் தொழிற்சாலைகளுக்குச் சென்று ரயில்வே தொழில்நுட்பம் குறித்து விளக்கமாய்த் தெரிந்துகொள்வார்கள். இரு நாடுகளிலிருந்தும் ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கும் இருநாடுகளிலும் உள்ள முக்கிய நகரங்களில் இருப்புப் பாதைஅமைப்பதற்கும் உள்ள செயல்திட்டங்கள் குறித்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள். இவ்வாறு ஜவாத் ஷெரீப் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications