தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
இந்தியா தனது செயற்கைக் கோள்களை தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவுள்ளது.
இதுவரை இந்தியா செலுத்திய இன்சாட் ரக செயற்கைக் கோள்களின் சேவையை இந்திய தொலைக் காட்சி போன்ற அரசுநிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தன.
இப்போது ஏவப்பட்டுள்ள இன்சாட் 3-பி செயற்கைக் கோளின் டிரான்பாண்டர்களை தனியார் டிவி, தனியார் இன்டர்நெட் சேவைநிறுவனங்கள் (ஐ.எஸ்.பி) போன்றவர்களும் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதிக்கவுள்ளது. இப்போது தனியார் டிவிக்கள்வெளிநாட்டு தனியார் செயற்கைக் கோள்களைத் தான் தங்களது ஒளிபரப்புக்கு பயனபடுத்தி வருகின்றன.
இது தவிர செயற்கைக் கோள்களை தயாரிக்கும் பணியிலும் தனியாரை அனுமதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 74சதவீதத்துக்கும் குறைவான அன்னிய முதலீட்டைக் கொண்ட எந்த தனியார் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆய்வுமையத்துடன் இணைந்து செயற்கைக் கோள்கள் தயாரிக்க முன் வரலாம்.












Click it and Unblock the Notifications