தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
கம்ப்யூட்டர் புரோகிராமர்கள், எலெக்ட்ரீஷியனகளுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாக்களின் எண்ணிக்கை மீதானகட்டுப்பாட்டை தளர்த்தும் அமெரிக்க அரசின் திட்டம் அமலாக்கப்பட்டால் அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியகம்ப்யூட்டர் நிபுணர்களுக்கு பெரும் உதவியாய் அமையும்.
இது தொடர்பாக ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற நீதிக் கமிட்டி அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த் கட்டுப்பாட்டைநீக்கத் முடிவு செய்துள்ளது. ஹை-டெக் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவை அமெரிக்க அரசுஎடுக்கிறது.
கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா வழங்கிய எச்-1பி விசாக்களில் பாதியை இந்தியர்கள் தான் பெற்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான நீதிக் கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் பின்னர் அங்கு விவாதம்நடத்தப்பட்டு இது நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. கல்லூரி பட்டம் பெற்றவர்களுக்குத் தான் எச்-பி1 விசாவழங்கப்படுகிறது. இந்த விசா இருந்தால் அமெரக்காவில் 6 ஆண்டுகள் தங்கியிருக்க முடியும்.
அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் சரியான ஆட்கள் வேலைக்குக் கிடைக்காமல் சுமார் 3 லட்சம் பதவிகள்காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications