For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க இந்தியா முடிவு

டெல்லி:

விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க மாட்டோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த வாரம் காலாவதியாகவுள்ளஇந்தத் தடை மீண்டும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் மத்திய அமைச்சரவைக் கூடி இந்தத் தடையை நீட்டிக்கும் முடிவை எடுக்கவுள்ளது. எல்.டி.டி.ஈ. மீதான தடையைநீட்டிக்குமாறு கடந்த மாதமே மத்திய அரசுக்கு தமிழக திமுக அரசு பரிந்துரைத்துவிட்டது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என மத்திய ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளானமதிமுக, பாமக, சிவசேனா ஆகியவை கோரி வருகின்றன.

ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கைய்யா நாயுடு ஸ்டார்டிவிக்கு அளித்த பேட்டி.யில் கூறினார்.

தடையை விலக்கும் திட்டமே அரசிடம் இல்லை என்று கூறிய அவர், இது தொடர்பாக மதிமுக, பாமக ஆகியவை கூறியுள்ளகருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களாகும் என்றார்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்காமல் இந்தியாவால் இந்தப் பிரச்சனையில் முழு அளவில் தலையிட முடியாது எனஸ்டார் டிவிக்கு அளித்த பேட்டியில் மதிமுக தலைவர் வைகோ கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X