தமிழகத்தில் இன்று
ராஜமுந்திரி:
கிருஷ்ணா-கோதாவரி திட்டத்தின் உற்பத்தியாகும் 75,000 கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு இப்போது வீணாக எரித்துவிடப்படுகிறது. இதை சேமித்துஎரிபொருளாக பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
தனியார் எரிவாயு கார்ப்பரேஷனாகச் செயல்படும் இந்த கிருஷ்ண-கோதாவரி நிலையம் பைப்லைன் மூலம் எரிவாயுவை கியாஸ் அத்தாரிட்டி ஆஃப்இந்தியாவுக்கு வழங்கும்.
கிருஷணா-கோதாவரி திட்டப்படி கேசனப்பள்ளி மற்றும் லிங்காலா எண்ணெய்க்கிணறுகள் இணைக்கப்பட்டு அங்கிருந்து 75 ஆயிரம் க்யூபிக் மீட்டர்கள்எரிவாயு பயன்படுத்தப்படும்.
இதன்படி முதலில் கேசனப்பள்ளி எண்ணெய்க்கிணற்றில் 40 ஆயிரம் க்யூபிக் மீட்டர் எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும்எரிவாயுவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாங்கிக் கொள்ளும். இதேபோல் லிங்காலா எண்ணெய்கிணற்றிலிருந்தும் எரிவாயு எடுத்துஉபயோகிக்கப்படும். இந்த மாத இறுதியில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications