For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் நீடிப்பார்

By Staff
Google Oneindia Tamil News

வதோதரா: (குஜராத்)

டாக்காவில் நடக்கும் ஏசியா கப் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் பயிற்சியாளராக (கோச்) கபில் தேவ் தொடர்ந்து நீடிப்பார் என்றுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொதுச் செயலாளர் ஜெயந்த் லேலே கூறியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கிரிக்கெட் சூதாட்டம் உலககின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஊழலில்இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கும் தொடர்பிருக்கும் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. ஆனால் அவர் மேல் உள்ளஊழல்குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

டாக்கா கிரிக்கெட் போட்டி வரும் மே 28 ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கபில்தேவ் வரும் மே மாதம் 15 ம் தேதி முதல் கிரிக்கெட்வீரர்களுக்கு பயிற்சியளிபபார்.

தற்போது தேசிய கிரிக்கெட் பயிற்சியாளராக அவர் இருக்கிறார். அவர் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வாரா என்பது குறித்து இதுவரை எதுவும்தெரிவிக்கப்படவில்லை. இதைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை.

மேட்ச் பிக்சிங் பிரச்சனையினால் கபில்தேவ் ஒருபோதும் பதவி விலக மாட்டார். மேலும் ஜெயந்த் லேலே இதுகுறித்துக் கூறுகையில் கபில்தேவ்வரும் 15 ம் தேதி பூனாவில் என்னைச் சந்திக்க உள்ளார் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X