கிரீசிலிருந்து சிட்னிக்கு ஒலிம்பிக் ஜோதி புறப்பட்டது
கிரீஸ்:
சிட்னி ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி கிரீசில் உள்ள பண்டைய ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் ஜோதி புதன்கிழமைஏற்றப்பட்டது.
இத நகரில் தான் ஒலிம்பிக் பிறந்தது. இந்த ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு வீரர்கள் சிட்னிக்கு ஏந்திக் கொண்டுஓடுவர். சுமார் 100 நாட்களில் 27,000 கி.மீ. தூரத்தை இந்த ஜோதி கடக்கும்.
நூற்றுக்கணக்கான வீரர்களின் கைகள் மாறி, விமானத்திலும் இந்த ஜோதி கொண்டு செல்லப்படும்.
கிரேக்க பெண் தெய்வமான ஹெராவின் கோவிலில் இந்த ஜோதியை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. 3,000ஆண்டுகளுகளாக நடந்து வரும் மரபு இது.
இந்த ஜோதியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவரான கேவென் கோஸ்பரின் 11 மகளும் ஏந்திச்செல்லவுள்ளார். இதற்கு சிட்னியின் விளையாட்டு அமைப்பாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 10 நாட்களுக்கு இந்த ஜோதி கிரீசிலேயே பயணம் செய்யும். வரும் 20ம் தேதி ஏதென்ஸ் நகரில்முழுக்கவும் மார்பிளால் செய்யப்பட்ட பானதேநெய்க் அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த ஜோதி சிட்னிஒலிம்பிக் அமைப்பாளர்களிடம் வழங்கப்படும்.
இந்த விளையாட்டு அரங்கில் தான் 1896ம் ஆண்டில் முதல் மாடர்ன் ஒலிம்பிக் போட்டி நடந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications