தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொலைக் கைதிக்கு 4வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
கோவை:
உறவினர்கள் 5 பேரை கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ஈரோடு விவாயியின் தண்டனையை மீண்டும் ஒத்தி வைக்க மத்திய உள்துறைஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்துக் கூறப்படுவதாவது:
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி. இவர் நிலத்தகராறு காரணமாக தனது உறவினர்கள் 5 பேரை வெட்டி கொன்றார்.
இந்த வழக்கில் இவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனால் தொடர்ந்து மூன்று முறை இவரது தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
கோவை சிறையில் உள்ள இவரது தண்டனையை மீண்டும் நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நான்காவது முறையாக வியாழக்கிழமை மறு உத்தரவு வரும் வரை இவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications