தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
அண்ணா சிலை இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதி உதவி

சென்னை:

அண்ணா சிலை இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்ற அதிமுக உறுப்பினர்தாமரைக்கனியின் கோரிக்கையை ஏற்று, அப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் கருணாநதிஉத்தரவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கன மழையில் அண்ணா சிலை இடிந்து விழுந்ததில் லட்சுமி என்ற பெண் மரணம் அடைந்தார்.இப்பெண்ணின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்று சட்டசபையில் வியாழக்கிழமை அத்தொகுதிஉறுப்பினரான தாமரைக்கனி கோரிக்கை விடுத்தார்.

""கருணையும், நிதியும் அதிகம் கொண்ட முதல்வர் கருணாநதி, இதை கனிவோடு பரிசீலித்து ஏற்க வேண்டும் என்று கேட்டார்தாமரைக்கனி.

அதற்கு பதிலளித்த முதல்வர், ""இச்சம்பவம் 11.8.1999 அன்று நடந்துள்ளது. மழை காரணமாக மார்பளவு அண்ணா சிலைஉடைந்து விழுந்ததில் இப்பெண் அடிபட்டு இறந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் வருமானடையவர் என்பதால் நிதியுதவி தரமுடியாத நிலை. ஆனாலும், விபத்து நிவாரண நிதியாக வழங்கலாம் என்று அரசு கருதுகிறது.

எனவே, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து அப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+