தமிழகத்தில் இன்று
அகமதாபாத்:
இத்தாலியின் அலிடாலியா விமானத்தில் வந்த இந்தியப் பயணியின் உடமைகளை தொலைந்து போனதையடுத்து பயணிக்கு 75,000 ஆயிரம் ரூபாய் அபராதம்கொடுக்க வேண்டும் என விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
இது குறித்துக் கூறப்படுவதாவது:
மும்பையைச் சேர்ந்தவர் பிரதிபா சேத். இவரும் இவரது மகளும் கடந்த 1992 ம் ஆண்டு இத்தாலி நாட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கிருந்து மும்பைதிரும்பும் போது இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தார். ஆனால் அவர் மும்பை வந்து இறங்கியபோது அவரது உடைமைகள் வந்து சேரவில்லை.அவை இத்தாலியிலேயே சிக்கி விட்டன. விமான நிறுவனத்தின் தவறால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது.
அந்த விமானம் சிகாகோவிலிருந்து மும்பை வரும் போது இந்தத் தவறுதல் நடந்தது. அவருக்கு இதுதொடர்பாக இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானம்நஷ்டஈடு எதுவும் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இதுகுறித்துப் பிரதிபா கூறுகையில், நான் என்னுடைய மூன்று பெரிய சூட்கேஸ்களையும், ஒரு தோல் பையையும் வைத்திருந்தேன். ஒன்று கூட கிடைக்கவில்லை.தோல்பையில் நான் வைத்திருந்த பொருட்கள் எதுவுமே இல்லாமல் கிழிந்த நிலையில் திரும்பக் கடந்த வருடம் கிடைத்தது. சூட்கேஸ்கள் மூன்றும்கிடைக்கவேயில்லை என்றார்.
நுகர்வோர் கோர்ட்டில் பிரதிபா ரூ 35 ஆயிரம் பெறுமானமுள்ள பொருட்கள் இருந்ததாகப் புகார் கொடுத்துள்ளார். இதை விசாரித்த நுகர்வோர் கோர்ட்எட்டு வருடங்களாக இத்தாலியன் ஏர்லைன்ஸ் விமானம் இதற்கு நஷ்டஈடு எதுவும் கொடுக்கவில்லை.
அதனால் பயணி பிரதிபாவின் ரூ 35 ஆயிரம் பெறுமானமுள்ள பிரதிபாவின் உடைமைகளுக்கான நஷ்டஈடாக ரூ 75 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றுதீர்ப்புக் கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.