தமிழகத்தில் இன்று
சென்னை:
நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின் சென்னை நகர மக்களுக்கு சனிக்கிழமை முதல் கிருஷ்ணா நதி நீர் வழங்கப்படுகிறது.
செனனை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தெலுங்கு கங்கை திட்டம் தீட்டப்பட்டது.
பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த திட்டம் 96ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்காக ஆந்திராவுடன் மீண்டும் பேசப்பட்டு, சில கோடி ரூபாய் செலவில் கால்வாய்கள்வெட்டப்பட்டன.
அதன் பின்னர் சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது. ஆனால். வரும் வழியில் கால்வாய்கள்உடைந்ததால் தண்ணீர் பாதியில் நின்று விட்டது.
அதைத் தொடர்ந்து மழைக் காலம் வந்து விட்டதால், தண்ணீர் தேவை தமிழகத்திற்கு இல்லாமல் போனது.இப்போது வறட்சி ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருவதால், உடனடியாக கிருஷ்ணா நீர் பெறும்வேலைகளில் தமிழக அரசு இறங்கியது.
அதன் பலனாக கால்வாய்கள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டது. பணிகள் முடிவடிந்ததும்ஆந்திர அரசை வற்புறுத்தி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
8 நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக் குப்பத்தை வந்தடைந்தது. வியாழக்கிழமைகாலையில் 5.5 கன அடி வீதம் வந்த தண்ணீர் அளவு அதிகரித்து விநாடிக்கு 13 கன அடி வீதம் வந்துகொண்டிருக்கிறது.
வெள்ளி இரவுக்குள் தண்ணீர் அளவு 100 கனஅடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீரைக் வீணாக்காமல்பூண்டி ஏரிக்கு கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.
பூண்டி ஏரியில் இருந்து சனிக்கிழமை முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications