தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை ராணுவத்துக்கு இஸ்ரேலும் பாகிஸ்தானும் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன என்று பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
ஆனால், தமிழர்களை வெல்ல எந்த படையாலும் முடியாது என்றார். இது குறித்து ராம்தாஸ் வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் நடந்து வரும் போர் உச்ச கட்ட நிலையை அடைந்து தமிழ் வீரர்கள் யாழ்பாணத்தை நெருங்கிவருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தையும், தளவாடங்களையும் இலங்கைக்குஅனுப்புமாறு இந்தியாவிடம்கேட்டது.
ஆனால், ராணுவத்தை அனுப்புவது இல்லை என்றும் அமைதி வழியில் பிரச்னை தீர தேவையான உதவிகளைசெய்வது எனறும், இந்துமாக் கடலில் அந்நிய நாடுகள் ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்வது என்றும்மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய அரசின் இந்த துணிச்சலான முடிவுகளை வரவேற்பதோடு அவைகளை நான் பாராட்டுகிறேன். அதே போலசீனாவின் நிலையும் பாராட்டத்தக்கது.
ஆனால், இந்தியா எடுத்துள்ள முடுவுகளுக்கு மாறாக பாகிஸ்தானும், இஸ்ரேலும் இலங்கைக்கு ஆயுத உதவிசெய்துள்ளன. இஸ்ரேல் படை விமானங்களையும், கணிசமான ஆயுதங்களையும் இலங்கையில் இறக்கி உள்ளது.
பாகிஸ்தான் ஒரு கப்பல் நிறைய ராக்கெட்டுகளையும் அவற்றை ஏவும் கருவிகளையும் அனுப்பி வைத்துள்ளது.பாகிஸ்தானும், இஸ்ரேலும் செய்துள்ள ஆயுத உதவி இந்திய நலனுக்கும், தமிழர் பாதுகாப்புக்கும் எதிரானது.
மனித உரிமைக்கு எதிரான பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை உலகில் உள்ள தமிழ் உணர்வுகொண்டவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த இரு நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டுமூக்கறுபடப்போவது நிச்சயம்.
பாகிஸ்தான் கார்கிலில் பட்ட அவமானம் போதாது என்று இலங்கையிலும் அவமானப்பபடப் போகிறது. தன்சொந்த நாட்டிலேயே அரசியல் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் திணறும் பாகிஸ்தான்,இலங்கையின் எதேச்சதிகாரத்திற்கு துணை போகத் துடிக்கிறது.
எந்த ஆயுதத்தையும் தாங்கும் மன உறுதி இலங்கைத தமிழர்களிடம் உள்ளதை பச்சோந்தி பாகிஸ்தான்உணரவில்லை. இலங்கை தமிழ் வீரர்கள் பாகிஸ்தானின் வாலை ஒட்ட நறுக்கி அனுப்புவார்கள்.
தமிழனை வெல்ல எந்த படையாலும் முடியாதுஎன்பதை தமிழ் மறவர்கள் நிரூபிக்கத்தான் போகிறார்கள். எந்தஉயிர்த் தியாகம் செய்தாவது தமிழர்கள் கொள்கையையும் . சுய உரிமையையும் இலங்கையில் நிலை நாட்டப்போவது உறுதி என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications