For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்கெட் சூதாட்டம்: சிபிஐ விசாரணை தீவிரம் - பிந்த்ரா, பிரபாகர் விசாரிக்கப்படுவர்

By Staff
Google Oneindia Tamil News

புது தில்லி:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதானகிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் குறித்த மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ)விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக வெளியாகும் புகார்கள் குறித்து சிபிஐ விசாரித்துவருகிறது. பல வழிகளிலும் சிபிஐ அதிகாரிகள் தகவல்கள் திரட்டி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் ஆகியோரிடம் சிபிஐ விசாரிக்கஉள்ளது. விசாரணையின்போது அவர்களிடமிருந்து முக்கிய தகவல்களை சிபிஐஅதிகாரிகள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்த கிரிக்கெட் வீரரின் பெயரை விசாரணையின்போதுவெளியிடத் தயாராக இருப்பதாக மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார். அதே நேரத்தில்,மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது கபில் தேவ்தான் என்று பிந்த்ராகூறியுள்ளார்.

ஆகவே, சிபிஐ விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.சிபிஐ தற்போது தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட்வீரர்கள், கிரிக்கெட் வாரிய முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரித்துவருகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X