தமிழகத்தில் இன்று
பாகிஸ்தான்:
இலங்கைக்கு நாங்கள் ஆயுதங்கள் எதுவும் அனுப்பவில்லை என்று பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் 40 ஆயிரம் ராணுவவீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்துள்ளன.
இந்த நிலையில் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்யும்படி இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காபல்வேறு நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பாகிஸதான் இலங்கைக்கு ஆயுத உதவி செய்து வருவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன.
ராக்கெட் லாஞ்சர், மற்றும் 1600 ராக்கெட் குண்டுகளை பாகிஸ்தான் கப்பல் ஏற்றிக்கொண்டு இலங்கைக்குச்செல்வதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன.
ஆனால் இதை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது. இலங்கைக்கு நாங்கள் ஆயுத உதவி எதுவும்செய்யவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தவிர, வடகொரியா, தென்ஆப்பிரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடமும் இலங்கை ஆயுதஉதவிகோரியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.